ECONOMY

நாட்டில் 1,291 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- மூவர் உயிரிழப்பு

12 அக்டோபர் 2022, 4:50 AM
நாட்டில் 1,291 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- மூவர் உயிரிழப்பு

ஷா ஆலம், அக் 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 1,291 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 57 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 21,863 பேர் இன்னும் அதன் தீவிர தாக்கத்தை கொண்டிருக்கின்றனர். அவர்களில் 20,897 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 920 பேர் மருத்துவமனையிலும் 46 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொடர்புடைய மூன்று மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,406 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.