ஜோகூர் பாரு, அக் 11 - இங்குள்ள தாமான் ஸ்கூடாயில் இம்மாதம் 2ஆம் தேதி மூன்று வயது குழந்தையை சித்திரவதை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கார் விற்பனையாளர் மற்றும் இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணின் தடுப்புக் காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் மேல் விசாரணைக்காக இன்று முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை அவ்விருவரையும் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமாட் கூறினார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதால் இது குறித்து எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை அவர் அறிக்கை ஒன்றின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இந்த விசாரணை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட 28 வயது விற்பனையாளர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க வீட்டுப் பணிப்பெண் ஆகிய இருவரும் இன்று வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ECONOMY
குழந்தை சித்திரவதை- இருவருக்கு எதிரான தடுப்புக் காவல் ஆறு நாட்களுக்கு நீட்டிப்பு
11 அக்டோபர் 2022, 3:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



