கோலாலம்பூர், அக் 8- சிலாங்கூர் விவேக நகர மற்றும் இலக்கவியல் பொருளாதார மாநாட்டையொட்டி (எஸ்.டி.இ.சி.) நடைபெறும் கண்காட்சியில் இரண்டு மின்சார வாகனங்களான கியா இவி 6 காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாட்டிற்கு வரும் பார்வையாளர்கள் நெருங்கி நின்று பார்ப்பதற்காக சமீபத்திய ரகத்தைச் சேர்ந்த வாகனத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை தாங்கள் செய்ததாக பெர்மாஸ் ஆட்டோ பெர்ஹாட் தொழில்நுட்பப் பயிற்சியாளர் முகமட் நோர் அக்மல் அனுவார் கூறினார்.
இந்த மின்சார வாகனம் அதி வேகமான உந்து சக்தியைக் கொண்டுள்ளது. 5.2 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக மணிக்கு 183 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று அவர் சொன்னார்.
இந்த வாகனத்தைத் தவிர, மின்சார வாகனங்களில் காணப்படும் கருவிகளையும் நாங்கள் காட்சிப்படுத்துகிறோம், மேலும் அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் மின்சார கார்களின் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 6 முதல் 9 வரை இந்த எஸ்.டி.இ.சி. கண்காட்சியில் பங்கேற்கும் 113 கண் காட்சியாளர்களில் பெர்மாஸ் ஆட்டோ பெர்ஹாட் நிறுவனமும் ஒன்றாகும்.
அதே நேரத்தில், பெர்மாஸ் ஆட்டோ பெர்ஹாட் 17 முதல் 22 வயது வரையிலான இளைஞர்களுக்காக மின்சார வாகன துறையில் பயிற்சி திட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளதாக முகமது நோர் அக்மல் மேலும் கூறினார்.
ECONOMY
எஸ்.டி.இ.சி. கண்காட்சியில் மின்சார கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன
8 அக்டோபர் 2022, 2:28 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



