ALAM SEKITAR & CUACA

ஜோகூரில் மேலும் ஒரு துயர் துடைப்பு மையம் திறப்பு-பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு

6 அக்டோபர் 2022, 5:00 AM
ஜோகூரில் மேலும் ஒரு துயர் துடைப்பு மையம் திறப்பு-பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு

ஜோகூர் பாரு, அக் 6- வெள்ளம் காரணமாக பொந்தியான், ஸ்ரீ அனோம் தேசிய பள்ளியில் மேலும் ஒரு தற்காலிக துயர் துடைப்பு மையம்  நேற்று திறக்கப்பட்டது.

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள  வெள்ளப் பேரிடர் காரணமாக துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 22 ஆக இருந்த வேளையில் இன்று காலை 8.00 மணியளவில் அந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

நேற்று மாலை 4.00 மணி முதல் செயல்பட்டு வரும் அந்த துயர் துடைப்பு மையத்தில் கம்போங் பாரிட் ஹாஜி முகமது சங்கலாங்கிலுள்ள நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் தங்கியுள்ளதாக பொந்தியான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு அறிக்கை ஒன்றில் கூறியது.

இதனிடையே, சுங்கை லீனாவ் தேசிய பள்ளியில் செயல்பட்டு வரும் துயர் துடைப்பு மையத்தில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை காலை 10 பேராக குறைந்துள்ளதாக அந்த குழு தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு பெய்த அடை மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.