ALAM SEKITAR & CUACA

கிள்ளான் வட்டாரத்தில் நாளை முதல் புதன் வரை கடல் பெருக்கு அபாயம்

10 செப்டெம்பர் 2022, 6:33 AM
கிள்ளான் வட்டாரத்தில் நாளை முதல் புதன் வரை கடல் பெருக்கு அபாயம்

ஷா ஆலம், செப் 10- நாளை தொடங்கி வரும் புதன்கிழமை வரை காலை 6.00  மணி முதல் காலை 8.00 மணி வரை கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிள்ளான் வட்டார மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழையுடன் ஒரே நேரத்தில் நிகழும் இந்த கடல் பெருக்கு காரணமாக வெள்ளம் மற்றும் தடுப்பணை உடையக்கூடிய அபாயம் உள்ளதாக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது.

வானிலை மற்றும் கூடுதல் வழிகாட்டுதலை சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து பெறும்படி  வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிள்ளான் மாவட்ட பேரிடர் செயல்பாட்டு அறை நாளை ஞாயிற்றுக்கிழமை  முதல் செயல்படும்  என்று பேரிடர் மேலாண்மைக் குழு  முகநூல் வாயிலாக வெளியிட்ட   அறிக்கையில் தெரிவித்தது.

இதே போன்ற கடல் பெருக்கு வரும் செப்டம்பர் 27 முதல் 29 வரை காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நிகழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. போர்ட் கிள்ளான் பகுதியில்  5.5 மீட்டர் வரை அலைகள் உயரும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.