ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 1,988 பேர் பாதிப்பு- நால்வர் பலி

10 செப்டெம்பர் 2022, 3:30 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 1,988 பேர் பாதிப்பு- நால்வர் பலி

ஷா ஆலம், செப் 10-  நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று இரண்டாயிரத்திற்கும் குறைவாகப் பதிவானது. இந்நோயினால் நேற்று 1,988 பேர் பாதிக்கப்பட்ட வேளையில் அவற்றில் இரு சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கடந்த மூன்று தினங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்ததாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 63 ஆயிரத்து 547 ஆகப் பதிவாகியுள்ளது.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள் பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,274 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நேற்று 2,016 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்த வேளையில் நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 38 ஆயிரத்து 009 ஆக ஆகியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.