ECONOMY

எபிட் லூ வழக்கு விசாரணை செப்டம்பர் 27 அன்று தொடங்குகிறது - புக்கிட் அமான்

28 ஆகஸ்ட் 2022, 5:08 AM
எபிட் லூ வழக்கு விசாரணை செப்டம்பர் 27 அன்று தொடங்குகிறது - புக்கிட் அமான்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: சமய போதகர், எபிட் இரவான் இப்ராஹிம் லூ அல்லது எபிட் லூ மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 27 முதல் 30 வரை சபாவில் உள்ள டெனோம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

புக்கிட் அமான் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் உதவி ஆணையர் ஏ ஸ்கந்தகுரு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், 37 வயதான எபிட் லூ, குற்றவியல் சட்டத்தின் 509வது பிரிவின் கீழ் 11 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடந்த பிப்ரவரி மாதம், எபிட் லூ, டெனோம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 11 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 1,000 ரிங்கிட் ஜாமீனில் இரண்டு ஜாமீன்களுடன் விடுவிக்கப்பட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.