NATIONAL

எஃப்.ஏ. கிண்ணம்- அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற சிலாங்கூருக்கு மந்திரி புசார் வாழ்த்து

24 ஜூலை 2022, 2:56 AM
எஃப்.ஏ. கிண்ணம்- அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற சிலாங்கூருக்கு மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், ஜூலை 24- கோத்தா கினபாலு, லிக்காஸ் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற எஃப்.ஏ. கிண்ண  காலிறுதிப் போட்டியில்  சபாவை  வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்ற சிலாங்கூர் எஃப்.சி. குழுவுக்கு மந்திரி புசார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சபாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற சிலாங்கூர் எஃப்.சி. அணிக்கு எனது வாழ்த்துக்கள் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தவணைக்கான எஃப்.ஏ. கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு ஏதுவாக சிறப்பான ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி வாருங்கள் என தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்றுநர் மைக்கல் ஃபெய்டென்பெய்னர் தலைமையிலான சிலாங்கூர் அணி தனது முதல் கோலை ஆட்டத்தின் தொடக்கத்தில் இறக்குமதி ஆட்டக்காரர் யுரி ஹென்ரிக் மூலம் போட்டது.

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் ஹெர்லிசன் கெய்யோன் புகுத்திய இரண்டாவது கோலின் மூலம் சிலாங்கூர் தனது வெற்றி வாய்ப்பை வலுப்படுத்திக் கொண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.