ECONOMY

ஆசிரியர்கள் பகடிவதையின் மூல காரணத்தை மறைக்கிறார்கள்

27 மே 2022, 10:13 AM
ஆசிரியர்கள் பகடிவதையின் மூல காரணத்தை மறைக்கிறார்கள்

ஷா ஆலம், மே 27 - பள்ளியின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் பகடிவதை சம்பவங்களை பள்ளி நிர்வாகத்தினர் மறைந்திருப்பது பரவலாக காரணங்களில் ஒன்றாகும்.

பல்கலைக்கழக கெபாங்சான் மலேசியா கல்வி ஆய்வு மையத்தின் விரிவுரையாளர் ஒருவர், இந்தப் பிரச்சனையை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், அதைக் கட்டுப்படுத்த ஆசிரியர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று சினார் ஹரியான் தெரிவித்தது.

"எனவே, அந்த காரணத்திற்காக, அதிக விழிப்புணர்வு முக்கியமானது. பகடிவதை என்பது சிறிய பிரச்சினை அல்ல, தீவிரமானது பெரியதுமான ஒன்று என்பதை ஆசிரியர்கள் எப்போதும் பள்ளி மாணவர்களுக்கு நினைவூட்ட அல்லது உணர்த்த வேண்டும்.

"பல்வேறு காரணிகளால் பகடிவதை பிரச்சினையை மறைக்க பள்ளியின் முயற்சியை நாங்கள் அதிகம் காண்கிறோம், அவர்கள் பள்ளியின் நற்பெயரைக் பராமரிக்க விரும்புகின்றனர்" என்று மே 19 அன்று டாக்டர் அனுவார் அகமது கூறினார்.

எந்தவொரு மாணவரும் பாதிக்கப்பட்டால், அத்தகைய விஷயங்களைக் கையாள்வதில் பள்ளி நிர்வாகமும் தெளிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.