ECONOMY

தொழிலாளர் தின  விடுமுறை புதன்கிழமைக்கு மாற்றப்படுகிறது என மாநில அரசு தெரிவித்துள்ளது

3 மே 2022, 3:39 AM
தொழிலாளர் தின  விடுமுறை புதன்கிழமைக்கு மாற்றப்படுகிறது என மாநில அரசு தெரிவித்துள்ளது

ஷா ஆலம், மே 2 - ஹரி ராயா  பெருநாளின் அதிகாரப்பூர்வமாக திங்கள் கிழமை என அறிவித்தது தொடர்ந்து, தொழிலாளர் தின விடுமுறையை மே 4 புதன்கிழமைக்கு மாற்ற மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

மாநில அரசின் செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், இந்த முடிவு விடுமுறைகள் சட்டம் 1951 இன் பிரிவு 3 இன் கீழ் உள்ள விதியின் கீழ் உள்ளதாகவும், சிலாங்கூர் சுல்தானின் அரச உயரதிகாரியின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

“இந்த அறிக்கை மற்றும் விடுமுறைகள் சட்டம் 1951 இன் பிரிவு 3 மற்றும் சிலாங்கூர் சுல்தானின் அரச அதிபதியின் ஒப்புதலுக்கு இணங்க, தொழிலாளர் தினம் மே 4, 2022 புதன்கிழமைக்கு மாற்றப்படும் என்று மந்திரி புசார் ஒப்புக்கொண்டார்.

"பொது விடுமுறை மாற்றம் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாநில சட்டப்பூர்வ அமைப்புகளின் பயன்பாட்டிற்காக நீட்டிக்கப்பட்டுள்ளது," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தொழிலாளர் தினத்தை புதன்கிழமைக்கு மாற்றுவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அறிவிப்பையும் மாநில அரசு வரவேற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.