ALAM SEKITAR & CUACA

நாட்டில் 831,523 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

30 ஏப்ரல் 2022, 10:23 AM
நாட்டில் 831,523 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 30: நேற்றைய நிலவரப்படி, சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) கீழ் ஐந்து முதல் 11 வயதுடைய மொத்தம் 831,523 சிறார்கள் அல்லது 23.4 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 15 லட்சத்து 28 ஆயிரத்து 733 சிறார்கள் அல்லது 43 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 112 பேர் அல்லது 93 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், 29 லட்சத்து 91 லட்சத்து 223 பேர் அல்லது 96.2 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 860 பேர் அல்லது 68.1 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர், அதே சமயம் 2 கோடியே 29 லட்சத்து 66 ஆயிரத்து 843 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 191 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

10,692 முதல் டோஸ்கள், 24,862 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 3,027 பூஸ்டர் டோஸ்கள் உட்பட மொத்தம் 38,581 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 2 லட்சத்து 74 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.