ALAM SEKITAR & CUACA

ஏழு சிலாங்கூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது

25 ஏப்ரல் 2022, 11:30 AM
ஏழு சிலாங்கூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 25 - சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வானிலை முன்னறிவிப்பில் கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகள் அடங்கும்.

"பினாங்கு, பெர்லிஸ், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை, மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்" என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று பிற்பகல் 2.40 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கெடாவில் (லங்காவி, குபாங் பாசு, பாடாங் தெராப், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு), பினாங்கு, பேராக் (லாரூட், மாத்தாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம்), கிளந்தான் (கோலா கிராய்) மற்றும் பகாங் (கேமரூன் மலை, பெந்தொங் மற்றும் ரோம்பின்) போன்ற பல பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை கணிக்கப்பட்டுள்ளது.

சரவாக்கின் சில பகுதிகளில் மாலை 6 மணி வரை சீரற்ற வானிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: கூச்சிங், சமரஹான், ஸ்ரீ அமான், பெதோங், சரிகேய் (பாகன் மற்றும் சரிகேய்), முக்கா (தஞ்சோங் மனிஸ் மற்றும் டாரோ), கபிட் (சோங், கபிட் மற்றும் பெலாகா) மற்றும் பிந்துலு மற்றும் சபா: உட்புறம் (கோலா பென்யு, பியூஃபோர்ட் மற்றும் தம்புனன்), மேற்கு கடற்கரை (பாப்பர், புத்தாதன், பெனாம்பாங், கோத்தா கினாபாலு, துவாரன் மற்றும் கோத்தா பெலுட்), தவாவ் (லகாட் டத்து), சண்டகன் (கினாபதங்கன்) மற்றும் குடாட் (கோத்தா மருடு மற்றும் குடாட்).

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/மணி நேரம்) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.