ALAM SEKITAR & CUACA

நாடு முழுவதும் 660,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

24 ஏப்ரல் 2022, 4:59 PM
நாடு முழுவதும் 660,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 24: நேற்றைய நிலவரப்படி, சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட 667,069 சிறார்கள் அல்லது 18.8 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 14 லட்சத்து 77 ஆயிரத்து 888 சிறார்கள் அல்லது 41.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 85 ஆயிரத்து 265 பேர் அல்லது 92.7 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 85 ஆயிரத்து 091 பேர் அல்லது 95.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 6 ஆயிரத்து 894 பேர் அல்லது 68 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர், 2 கோடியே 29 லட்சத்து 63 ஆயிரத்து 872 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸை முடித்துள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 40 ஆயிரத்து 846 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

17,177 முதல் டோஸ்கள், 53,369 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 3,221 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 73,767 தடுப்பூசி டோஸ்கள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 7 கோடியே 13 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று கோவிட் -19 காரணமாக ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.