ECONOMY

எச்சரிக்கை : முகக்கவரி அணியவில்லை என்றால் அபராதம் வழங்கப்படும்

22 ஏப்ரல் 2022, 3:18 AM
எச்சரிக்கை : முகக்கவரி அணியவில்லை என்றால் அபராதம் வழங்கப்படும்

கோலாலம்பூர், ஏப்ரல் 22: ரமலான் காலத்திலும் ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்தின் போதும் முகக்கவரி அணியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தகவலை காவல்துறை இன்று மறுத்துள்ளது.

மறுபுறம், புக்கிட் அமான் நிர்வாக இயக்குநர் டத்தோ ஜைனி ஜாஸை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ​​ முகக்கவரி அணியாத குற்றம் உட்பட நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மீறும் நபர்கள் மீது அமலாக்கம் இன்னும் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

இதற்கிடையில், PDRM கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ஏசிபி ஏ.ஸ்கந்தகுரு, ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய எண்டமிக் நிலைக்கு மாறுவதற்கான எஸ்ஓபி இன்னும் அமலில் உள்ளது என்றும் பொது இடங்களில்   அணிவது முகக்கவரி கட்டாயம் என்றும் வலியுறுத்தினார்.

"எனவே, தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 (சட்டம் 342) இன் விதிகளின் கீழ் எஸ்ஓபியை மீறும் தரப்பினருக்கு PDRM அபராதம் வழங்கும்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.