ECONOMY

கடந்த  10 நாட்களாகக்  குணப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை தொற்றுக் கண்டவர்களைக்  காட்டிலும் அதிகம்

19 ஏப்ரல் 2022, 6:34 AM
கடந்த  10 நாட்களாகக்  குணப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை தொற்றுக் கண்டவர்களைக்  காட்டிலும் அதிகம்

கோலாலம்பூர், ஏப்ரல் 19:  தொடர்ந்து 10 நாட்களாகப் புதிய கோவிட்-19  நோயாளிகளை விட அதிகமாகக் குணப்படுத்தப்பட்டவர்களைப் பதிவு செய்து வருவதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மொத்தம் 14,423 குணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 7,140 புதிய சம்பவங்களை விட அதிகமாக உள்ளது, இது நாட்டில் இப்போது ஒட்டுமொத்தக் கோவிட் -19 சம்பவங்களை 4,396,165 ஆக மாற்றியுள்ளது.

“நேற்று பதிவான மொத்தப் புதிய சம்பவங்களில் இரண்டாம் கட்டத்தில், 3,639 சம்பவங்கள் அல்லது 50.96 விழுக்காடு; ஒன்றாம் கட்டத்தில் 3,458 சம்பவங்கள் அல்லது 48.43 விழுக்காடு, மூன்றாம் நான்காம் கட்டத்தில் 14 சம்பவங்கள் அல்லது 0.20 விழுக்காடு மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 15 சம்பவங்கள் அல்லது 0.21 விழுக்காடு பதிவாகியுள்ளன, ”என்று அவர் கூறினார்.

நேற்று 308 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார், இதில் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 171 சம்பவங்கள் அல்லது 55.5 விழுக்காடு, 137 சம்பவங்கள் அல்லது 44.5 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டமாகும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கான சுகாதார வசதிகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, தீவிரச் சிகிச்சைப் பிரிவு (ஐசியு) மற்றும் கோவிட்-19 குறைந்த ஆபத்துள்ள தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையம் (பிகேஆர்சி) ஆகியவற்றில் அந்தந்தப் படுக்கைகளை 50 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பயன்படுத்தியதாக எந்த மாநிலமும் பதிவு செய்யவில்லை என்றார்.

சுவாசக் கருவி தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 68 ஆகக் குறைந்துள்ளது, வென்டிலேட்டர் பயன்பாடும்   ஒன்பது சதவீதமாக இருந்தது.

இதற்கிடையில், டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகையில், நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட  கோவிட்-19 அல்லது Rt மதிப்பின் தொற்று விகிதம் 0.88 ஆகவும், சிலாங்கூர் அதிகபட்ச மதிப்பான 0.91 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.