ALAM SEKITAR & CUACA

ஜனவரி முதல் மே வரை பிறந்த 800க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிறந்தநாள் பரிசு

13 ஏப்ரல் 2022, 3:22 AM
ஜனவரி முதல் மே வரை பிறந்த 800க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு  பிறந்தநாள் பரிசு

ஷா ஆலம், ஏப்ரல் 13: கோலா குபு பாரு சட்டமன்றத்தில் நேற்று மூத்த குடிமக்கள் பரிவுத் திட்ட (எஸ்.எம்.யு.இ.) பங்கேற்பாளர்கள் மொத்தம் 879 பேர் ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை பிறந்தநாள் பரிசாக பெற்றனர்.

ஜனவரி முதல் மே வரை பிறந்த மூத்த குடிமக்களைக் கொண்ட குறைந்த வருமானம் கொண்டவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

RM100 மதிப்புள்ள பற்றுச் சீட்டு நேற்று கோல குபு பாரு சட்டமன்ற சமூக சேவை மையத்தில் விநியோகிக்கப்பட்டது.

“இந்த பற்றுச் சீட்டைப் பயன்படுத்தி அவர்கள் மே 15க்கு முன் பாத்தாங் காலி எகோன்சேவ் பேரங்காடியில் தேவையான பொருட்களை வாங்கலாம். இந்த பங்களிப்பு பெறுநர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மரண சகாய நிதி மற்றும் பற்றுச் சீட்டு விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த எஸ்.எம்.யு.இ. திட்டம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆண்டு திட்டத்தை தொடர சிலாங்கூர் பட்ஜெட் 2022 RM2.75 கோடி ஒதுக்கியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.