ALAM SEKITAR & CUACA

நாடு முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை நிறைவு செய்கின்றனர்

3 ஏப்ரல் 2022, 6:51 AM
நாடு முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை நிறைவு செய்கின்றனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 3: சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம், ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 6,129 சிறார்கள் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 13 லட்சத்து 46 ஆயிரத்து 625 சிறார்கள் அல்லது 38 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 58 லட்சத்து 44 ஆயிரத்து 706 பேர் அல்லது 67.3 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ்களைப் பெற்றுள்ளனர், 2 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 239 அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 53 ஆயிரத்து 182 பேர் அல்லது 91.7 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 49 ஆயிரத்து 478 பேர் அல்லது 94.8 விழுக்காட்டினர் தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றனர்.

8,752 முதல் ஊசிகள், 5,292 இரண்டாவது ஊசிகள் மற்றும் 11,658 பூஸ்டர் டோஸ் ஊசிகள் என மொத்தம் 25,702 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் மூலம் ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று 56 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.