ALAM SEKITAR & CUACA

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் வரை பலத்த காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை

29 மார்ச் 2022, 10:43 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் வரை பலத்த காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், மார்ச் 29: சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூரில் உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகள் மழைக்கான சூழ்நிலை ஏற்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது.

இதே வானிலை பேராக் (கோலா கங்சார், கிந்தா, கம்பார் பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம்), பகாங் (கேமரூன் மலை, லிபிஸ், ராவுப் மற்றும் பெந்தோங்) மற்றும் நெகிரி செம்பிலான் (ஜெலுபு, சிரம்பான், போர்ட் டிக்சன், கோலா பிலா மற்றும் ரெம்பாவ்) ஆகியவற்றைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கெடா, ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/மணி நேரம்) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.