ECONOMY

200 ஸ்ரீ செத்தியா தன்னார்வலர்களுக்கு பாராட்டு

27 மார்ச் 2022, 3:57 AM
200 ஸ்ரீ செத்தியா தன்னார்வலர்களுக்கு பாராட்டு

சுபாங் ஜெயா, மார்ச் 27: ஸ்ரீ செத்தியா சட்டமன்றத்தில் தன்னார்வலர்களாக செயல்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 200 குடியிருப்பாளர்கள் நேற்று இரவு ஒரு விழாவில் பாராட்டப் பட்டனர்.

அவர்களில் சிலாங்கூர் இளைஞர் இயக்கம், குடியிருப்பு சங்க பிரதிநிதிகள், குடியிருப்போர் சங்கம், மற்றும் பெண்கள் கலாச்சார மையம் ஆகியவைகளின் உறுப்பினர்கள் என மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பக்கர் கூறினார்.

“ஒரு சிறு நன்கொடையை வழங்கி இறந்த தன்னார்வலர்களின் மனைவிகள் மற்றும் வாரிசுகளும் நினைவு கூறப்பட்டனர்.

"இந்த தன்னார்வலர்கள் அனைவரின் சேவைகளும் தியாகங்களும் சுற்றியுள்ள மக்களுக்கு உதவுவதற்குப் போதுமானவை, குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய் காலம்," என்று அவர் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற நன்றிகூறும் இரவு உணவு விருந்தில் கூறினார்.

அடுத்த வாரம் ரமலான் வருவதைக் குறிக்கும் விதமாகவும், குடியிருப்பாளர்களிடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும் எம்பயர் சுபாங் ஹோட்டலில் விழா நடைபெற்றது.

விருந்துக்கு மேலதிகமாக, இசைக் கலைஞர்கள் குழுவின் நிகழ்ச்சிகள் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்வும் விருந்தினர்களை மகிழ்வித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.