ECONOMY

சுங்கை ரமாலில் 300 மாணவர்கள் பள்ளி பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்

23 மார்ச் 2022, 3:49 AM
சுங்கை ரமாலில் 300 மாணவர்கள் பள்ளி பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 23: சுங்கை ரமால் பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த (பி40) மொத்தம் 300 மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குத் திரும்புவதற்கான உதவிச் பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்.

மொத்தம் 200 மாணவர்கள் தலா RM120 மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளைப் பெற்றதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மேலும் 100 மாணவர்கள் காஜாங் நகராட்சி பிரிவு 16, எம்.பி.கே.ஜே கவுன்சில் உறுப்பினர் புகாரி பச்சோக் வழங்கிய RM100 பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்.

“ஒவ்வொரு பெறுநரும் பள்ளி பைகள், எழுதுபொருட்கள், முககவசங்கள், டைரிகள் மற்றும் மேசை காலண்டர் போன்றவற்றைப் பெற்றனர்.

"பிகேஎன்எஸ் பண்டார் பாரு பாங்கி வளாகத்தில் உள்ள நியமிக்கப்பட்ட கடைகளில் இருந்து பள்ளி சீருடைகள் அல்லது பிற பள்ளித் தேவைகளை வாங்க பெற்றோர்கள் பெறப்பட்ட பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தலாம்" என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டைத் தாக்கிய கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்ட பின்னர் பெற்றோர்கள் சுமையைக் குறைக்க இந்த நன்கொடை உதவும் என்று மஸ்வான் நம்புகிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.