ALAM SEKITAR & CUACA

கோவிட்-19 இருந்து மீண்ட பிறகு பூஸ்டர் டோஸ்களை எடுக்கலாம்

21 மார்ச் 2022, 7:20 AM
கோவிட்-19 இருந்து மீண்ட பிறகு பூஸ்டர் டோஸ்களை எடுக்கலாம்

கோலாலம்பூர், மார்ச் 21: தடுப்பூசி போடப்பட்டு, கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள், உடனடியாக ஊக்க தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

ஊக்க தடுப்பூசிகளை பெற ஆரோக்கியத்தை பாதுகாப்போம் கழகம் எஸ்டிஎன் பிஎச்டி (ProtectHealth) அழைப்பு விடுவதாக அக்கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனஸ் ஆலம் ஃபைஸ்லி, கூறினார். இப்போது ஒருவர் கோவிட்-19 ல் இருந்து மீண்டு, தடுப்பூசி போட்ட மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு, பூஸ்டர் டோஸைத் தொடர்ந்து செலுத்தலாம்.

இன்று ஒரு அறிக்கையில், நாட்டில் நோய்க்கிருமியால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ்களை எடுக்க வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

"நாட்டில் சுமார் 75 லட்சம் பெரியவர்கள் பூஸ்டர் டோஸ் ஊசிகளைப் பெறவில்லை, மேலும் இந்த எண்ணிக்கையில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 835,000 நபர்களும், முழு சினோவேக் தடுப்பூசியைப் பெற்ற 21 லட்சம் நபர்களும் அடங்குவர்.

“நாம் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை கோவிட்-19 இருந்து பாதுகாக்க வேண்டும். தயவு செய்து அவர்கள் இப்போதே பூஸ்டர் டோஸ் எடுத்து அவர்கள் குடும்பத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.