ECONOMY

65.3 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

16 மார்ச் 2022, 4:07 AM
65.3 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 16: நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 15,357,069 பேர் அல்லது 65.3 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 707 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 875 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில், மொத்தம் 11 லட்சத்து 97 ஆயிரத்து 667 பேர் அல்லது 33.7 விழுக்காட்டினர் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 39 ஆயிரத்து 254 பேர் அல்லது 91.3 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 38 ஆயிரத்து 900 பேர் அல்லது 94.5 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்றைய தினசரித் தடுப்பூசிகள் 17,939 முதல் டோஸ்கள், 1,728 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 36,918 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 56,585 டோஸ்கள் வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்தத் தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 82 லட்சத்து 75 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 95 இறப்புகள் பதிவாகியுள்ளன, சிலாங்கூரில் அதிகபட்சமாக 21 வழக்குகள் பதிவாகியுள்ளன.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.