ECONOMY

சிலாங்கூர் மற்றும் இரண்டு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 449 பேர் தற்காலிக தங்கும் மையங்களில்  உள்ளனர்.

10 மார்ச் 2022, 4:48 AM
சிலாங்கூர்  மற்றும் இரண்டு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 449 பேர் தற்காலிக தங்கும் மையங்களில்  உள்ளனர்.

கோலாலம்பூர், மார்ச் 10: ஜோகூர், மலாக்கா மற்றும் சிலாங்கூரில் உள்ள 120 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 449 பேர் வெள்ளத்தால் இன்று காலை 8 மணி நிலவரப்படி தற்காலிக மையங்களில் (பிபிஎஸ்) தங்கியுள்ளனர்.

நேற்று ஜோகூரில் உள்ள குளுவாங்கில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 202 பாதிக்கப் பட்டவர்கள் மூன்று பிபிஎஸ்க்கு வெளியேற்றப்பட்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (நட்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் (NDCC) இன்று காலை 8 மணிக்கு வெளியிட்ட தேசிய பேரிடர் சம்பவங்கள் குறித்த சமீபத்திய அறிக்கை, அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது.

குளுவாங்கில் உள்ள மூன்று பிபிஎஸ்கள் டேவான் கோலம் ஆயர், செகோலா கெபாங்சான் (எஸ்கே) ஸ்ரீ கெஞ்சனா மற்றும் எஸ்கே சுங்கை லினாவ் ஆகும், அதே சமயம் மலாக்காவில், ஜாசின் மாவட்டத்தில் உள்ள 11 குடும்பங்களைச் சேர்ந்த 40 நபர்கள் மார்ச் 8 செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட்ட பிபிஎஸ் எஸ்கே பாரிட் பெங்குலுவுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில், சிலாங்கூரில், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டங்களில் உள்ள 55 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 207 நபர்கள், நான்கு செயல்பாட்டு பிபிஎஸ்க்கு மாற்றப்பட்டனர்.

புக்கிட் செர்டாங் ஒராங் அஸ்லி கிராம சமூகக் கூடம், புக்கிட் தாடோம் ஒராங் அஸ்லி கிராம சமூகக் கூடம், கம்போங் புக்கிட் சாங்காங் பொதுக் கூடம் மற்றும் எஸ்.கே. கோத்தா வாரிசன் ஆகியவை சிலாங்கூரில் செயல்படும் பிபிஎஸ் ஆகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.