ECONOMY

அன்வார்: தலைநகரில் வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைவுபடுத்துங்கள்

8 மார்ச் 2022, 12:46 PM
அன்வார்: தலைநகரில் வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைவுபடுத்துங்கள்

ஷா ஆலம், மார்ச் 8 - தலைநகர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், வெள்ளத் தடுப்பு திட்டங்களை விரைவுபடுத்தி மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஜனவரி 20 அன்று டேவான் ராக்யாட்டில் இந்த விஷயத்தை எழுப்பிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வடிகால் மற்றும் தடுப்பு நகரத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வடிகால் மற்றும் தணிப்புத் திட்டங்களுக்கும் நிறைய செலவாகும் அதனால்  கோடி கணக்கில் செலவாகும் மற்ற திட்டங்களுக்கு  அனைத்து மெகா திட்டங்களையும் ஒத்திவைக்குமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

"இருப்பினும், இந்த வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்க உடனடி முன்னுரிமை கொடுக்க வேண்டும்," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் ஏற்பட்ட வெள்ளம் ஆயிரக்கணக்கான சாலைப் பயனாளர்களையும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சில மக்களையும் பாதித்தது என்று அன்வார் நினைவுபடுத்தினார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் வழக்கத்திற்கு மாறாகப் பெய்த கனமழையால் கோலாலம்பூர்  மற்றும் சிலாங்கூரில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இரண்டு மணி நேரத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கனமழை பெய்ததால், வடிகால் அமைப்பு சுமார் இரண்டு வாரங்களுக்குச் சாதாரண நீர் ஓட்டத் திறனைச் சமாளிக்க முடியாமல் போனது என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் கூறினார்.

டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், ஒரு மாதத்திற்கான சராசரி மழையளவு 200 மில்லிமீட்டராக இருந்ததாகவும், ஆனால் நேற்று மதியம் இரண்டு மணி நேரத்தில் 100 மில்லிமீற்றரைத் தாண்டிக் கனமழை பெய்ததாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, கோலாலம்பூரில் இந்த ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெள்ளத் தணிப்புத் திட்டம் ஒப்பந்ததாரர் பிரச்சனைகளால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மலேசியாகினி போர்டல் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.