ECONOMY

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 300 பேக் அடிப்படை உணவுகள் விநியோகம் - பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினர்

7 மார்ச் 2022, 9:53 AM
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 300 பேக் அடிப்படை உணவுகள் விநியோகம் - பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், மார்ச் 7: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 300 பேக் அடிப்படை உணவுகளைப் பெர்மாதாங் மாநிலச் சட்டமன்றம் (டன்) வழங்கியுள்ளது.

கிராமச் சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) மூலம் மொத்தத்தில் 150 விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிநிதி ரோசானா ஜைனல் அபிடின் தெரிவித்தார்.

“கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் அல்லது குடும்பங்கள் சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படுவதால் நாங்கள் இந்த முயற்சியை எடுத்தோம்.

"எனவே, இந்த வழியில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவர்களின் சுமையைக் குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

எம்.பி.கே.கே மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சமூகத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முயற்சி அவ்வப்போது தொடரும் என்றார்.

அதுமட்டுமின்றி, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அத்தகைய உதவி தேவைப்படும் நபர்கள் 03-3281 2069 அல்லது 010-557 3736 என்ற எண்ணில் பெர்மாதாங் தொகுதி சமூகச் சேவை மையத்தை அழைக்கலாம்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.