ECONOMY

மீன்பிடிக்கச் சென்ற 13 வயது இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்

3 மார்ச் 2022, 9:26 AM
மீன்பிடிக்கச் சென்ற 13 வயது இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்

சிரம்பான், மார்ச் 3: நேற்றிரவு 13 வயது சிறுவன் இங்கு அருகில் உள்ள தாமான் புக்கிட் சாகா, மண்டின் அருகே உள்ள குளத்தில் விழுந்து இறந்ததாக நம்பப்படுகிறது.

இங்குள்ள தாமான் டேசா பெலங்கி, மந்தின் பகுதியைச் சேர்ந்த டேனி இசாஹாகி முகமது அஸ்ருலின் உடல் நேற்றிரவு 11.28 மணியளவில் தீயணைப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மூத்த உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் சைபுல் நஸ்ரி முகமது கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 6.52 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையிடமிருந்து தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

"அச்சிறுவனின் தந்தை தன் மகனைக் கண்டுபிடிக்கக் குளத்தில் குதிக்க முயற்சி செய்தார், ஆனால் பலனளிக்கவில்லை, பின்னர் உதவிக்காகத் தீயணைப்புத் துறையை அழைத்தார். சிறுவன் குளத்தின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டார்.

"மாலை 5.30 மணியளவில், அச்சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் குளம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், மேலும் சிறுவன் அப்பகுதியில் ஓடும் பொழுது குளத்தில் விழுந்ததாக அச்சிறுவனின் நண்பர்கள் தெரிவித்தனர்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைக்காகப் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

- பெர்னாமா

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.