ALAM SEKITAR & CUACA

900,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றனர்

2 மார்ச் 2022, 3:40 AM
900,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 2: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய மொத்தம் 904,368 பேர் அல்லது 25.5 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 36 ஆயிரத்து 569 பேர் அல்லது 62.6 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், மேலும் மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரத்து 422 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், 2 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 349 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 1 ஆயிரத்து 714 பேர் அல்லது 90 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 28 லட்சத்து 97 ஆயிரத்து 292 பேர் அல்லது 93.1 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

26,476 முதல் டோஸ் ஊசிகள், 1,300 இரண்டாவது டோஸ் ஊசிகள் மற்றும் 73,262 ஊக்கத் தடுப்பூசிகள் உள்பட மொத்தம் 101,038 தடுப்பூசி ஊசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்திற்கான தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 349 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று 78 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.