ECONOMY

உக்ரேனிலிருந்து 11 மலேசியர்கள் கோலாலம்பூருக்கு வருவர்

1 மார்ச் 2022, 3:00 PM
உக்ரேனிலிருந்து 11 மலேசியர்கள் கோலாலம்பூருக்கு வருவர்

கோலாலம்பூர், மார்ச் 1: உக்ரேனின் கீவ் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒன்பது மலேசியர்களும் அவர்களைச் சார்ந்திருக்கும் இருவர்களும் இப்போது கோலாலம்பூருக்குத் திரும்பிச் செல்கின்றனர், அவர்கள் வரவு விரைவில் எதிர்பார்க்கப் படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

அவர்களுடன் சேர்ந்து சிங்கப்பூர் பிரஜை ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டதாகக் பிரதமர் தனது சமூக ஊடகத்தில் ஒரு பதிவில் குறிப்பிட்டார்.

இரு நாடுகளின் நெருக்கத்தை மலேசிய அரசாங்கம் எப்போதும் கொண்டாடுகிறது என்றும், ஆசியான் குடும்பமாக இணைந்து செயல்பட குடியரசுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கீவ்விலிருந்து 11 மலேசியர்கள் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரும் வெளியேற்றப்பட்டு, நேற்று காலையில் போலாந்து சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா ட்விட்டரில் தெரிவித்தார்.

முன்னதாக, இஸ்மாயில் சப்ரி, உக்ரேனில் மீதமுள்ள மலேசியர்களின் இடமாற்றம் பிராந்தியத்தின் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.