ECONOMY

கோவிட்-19 : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,100 ஆக குறைந்தது

1 மார்ச் 2022, 12:19 PM
கோவிட்-19 : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,100 ஆக குறைந்தது

ஷா ஆலம், மார்ச் 1- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 23,100 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 24,466 ஆக இருந்தது.

நேற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 22,914 பேர் அல்லது 99.19 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பை எதிர்நோக்கியவர்களாவர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 186 பேர் அல்லது 0.81 விழுக்காட்டினர் கடுமையான பாதிப்புகளைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் சொன்னார்.

நேற்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 42 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நேற்று 30,624 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 16 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது.

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 8,304 சம்பவங்கள் (35.95 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 14,610 சம்பவங்கள் (63.24 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 96 சம்பவங்கள் (0.42 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 39 சம்பவங்கள் (0.17 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 51 சம்பவங்கள் (0.22 விழுக்காடு)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.