ECONOMY

தனிமைப்படுத்தலின் போது மைசெஜாத்ராவில் அறிகுறிகளைக் கண்காணித்துப் புதுப்பிக்கவும்

24 பிப்ரவரி 2022, 6:13 AM
தனிமைப்படுத்தலின் போது மைசெஜாத்ராவில் அறிகுறிகளைக் கண்காணித்துப் புதுப்பிக்கவும்

கோலாலம்பூர், பிப் 24: கோவிட்-19 நோய்தொற்று உள்ள நபர்கள் ஒவ்வொரு நாளும் மைசெஜாத்ரா செயலியில் தோன்றும் அறிகுறிகளைக் கண்காணித்துப் புதுப்பிக்க வேண்டும், இதனால் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும்.

கோவிட்-19 நோய்தொற்று உள்ள நபர்கள், அறிகுறிகள் தீவிரமடைந்து வருவதைக் கண்டால், அருகில் உள்ள சுகாதார நிலையங்களைத் தொடர்புகொள்ளவும் அல்லது நேரடியாகச் செல்லவும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று TikTok வீடியோ மூலம் தனது ட்விட்டரில் அறிவுறுத்தினார்.

"மூச்சுத் திணறல், நீடித்த காய்ச்சல், மார்பு வலி மற்றும் பசியின்மை போன்ற உங்கள் அறிகுறிகளையும் ஆரோக்கிய நிலைகளையும் கண்காணிக்கவும். அறிகுறி இருப்பதைக் கண்டறிந்த நபர்கள் உடனடியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் " என்று அவர் கூறினார்.

" நோய்தொற்று உறுதி செய்யப்பட்டால், கோவிட்-19 சோதனையின் முடிவுகளை மைசெஜாத்ரா செயலியில் தெரிவிக்கவும். தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், செய்ய வேண்டியவை (பிரிவில்) அறிவிப்பைப் பெறுவீர்கள். இது ஒரு சுகாதார மதிப்பீட்டு கருவியாகும், மேலும் நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகளை நீங்கள் எப்போதும் புதுப்பிக்கலாம்,”என்று அவர் கூறினார்.

கைரி பொதுமக்களை எப்போதும் டிஆர்ஐஐஎஸ் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார், அதாவது சோதனை செய்தல், அறிவித்தல், தனிமைப்படுத்துதல், தகவல் அளித்தல் மற்றும் சிகிச்சை பெறுதல் மற்றும் முககவசம் அணிய வேண்டும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.