ECONOMY

PT3 செயல்படுத்துவது குறித்துக் கல்வி அமைச்சகம் விரைவில் முடிவெடுக்கும்

23 பிப்ரவரி 2022, 9:53 AM
PT3 செயல்படுத்துவது குறித்துக் கல்வி அமைச்சகம் விரைவில் முடிவெடுக்கும்

கூலாய், பிப் 23: படிவம் மூன்று சோதனையை (PT3) செயல்படுத்துவது குறித்துக் கல்வி அமைச்சகம் விரைவில் முடிவெடுக்கும் என்று துணைக் கல்வி அமைச்சர் டத்தோ முகமது ஆலமின் கூறினார்

உத்தியோகப்பூர்வ முடிவை எடுப்பதற்கு முன்னர் அமைச்சு இன்னும் ஆய்வு செய்து, விவாதித்து வருவதாக அவர் கூறினார்.

"இது ஒத்திவைக்கப்படுவதா அல்லது ரத்து செய்வதா? நாங்கள் இன்னும் மதிப்பீடு மற்றும் விவாதத்தில் இருக்கிறோம். பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து ஆய்வு செய்து முறைப்படுத்துவோம். மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்று நான் நம்புகிறேன், "என்று அவர் கூறினார்.

இன்று, மலேசியாவின் தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (NUTP) மூன்றாம் படிவ மாணவர்கள் படிப்பில்  ஏற்பட்ட இடையூறு  காரணமாக PT3 தேர்வை  ஒத்திவைக்க அல்லது ரத்து செய்யுமாறு கல்வி அமைச்சை வலியுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே மூன்றாம் படிவ  மாணவர்கள்  பள்ளியில் கல்விகற்றதால்  இந்த, ஒத்திவைப்பு முக்கியமானது என்று NUTP தலைவர் அமினுடின் அவாங் கூறியதாகக் கூறப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.