ECONOMY

மார்ச் 4 ஹலால் மாநாட்டில் 40 நிறுவனங்கள் பங்கேற்றன

23 பிப்ரவரி 2022, 7:36 AM
மார்ச் 4 ஹலால் மாநாட்டில் 40 நிறுவனங்கள் பங்கேற்றன

ஷா ஆலம், பிப் 23: ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் (எஸ்ஏசிசி) மார்ச் 4 ஆம் தேதி நடைபெற உள்ள சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டில் (செல்ஹாக்) 40 நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 100 கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.

உணவு, மருந்தகம், அழகு, சுற்றுலா, ஃபேஷன் மற்றும் ஹலால் பொருட்கள் என ஆறு கிளஸ்டர்களை கண்காட்சியாளர்கள் கொண்டிருப்பதாக ஹலால் தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜாவாவி அகமது முக்னி விளக்கினார்.

"மாநாடு மார்ச் 6 ஆம் தேதி வரை மூன்று நாட்கள், காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை நீடிக்கும். மன்றம், எக்ஸ்போ மற்றும் வணிக பொருத்தம் ஆகிய மூன்று கூறுகளை இம்மாநாடு உள்ளடக்கியது," என்று அவர் நேற்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி மார்ச் 4ஆம் தேதி மாநாட்டை திறந்துவைக்க  உள்ளார்.

செல்ஹாக்  நாட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் உள்ள தொழில்துறையினர் பங்கேற்புடன் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். இத்தொழில் தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெறப் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.