ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179  ஆக உயர்வு

23 பிப்ரவரி 2022, 5:08 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179  ஆக உயர்வு

ஷா ஆலம், பிப் 23- நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179 ஆக உயர்வுக் கண்டது. கடந்த 21 ஆம் தேதி முதல் சற்றுக் குறைந்து வந்த நோய்த் தொற்று நேற்று ஒரே  நாளில் 2,000 சம்பவங்கள் அதிகரிப்பைப் பதிவு செய்தது.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 172 பேர் அல்லது 0.63 விழுக்காட்டினர்  மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

எஞ்சிய 27,007 பேர்  அல்லது 99.37 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 172 பேரில் 21.8 விழுக்காட்டினர் அல்லது 51 பேர் தடுப்பூசியை முழுமையாக அல்லது அறவே பெறாதவர்கள் என்று அவர் சொன்னார்.

மேலும் 91 பேர் அல்லது 52.91 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் செலுத்திக் கொள்ளாதவர்களாவர் என்றார் அவர்.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலாக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 73 ஆயிரத்து 958 ஆக உயர்வு கண்டுள்ளது.

பிரிவு வாரியாகக் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 7,792 சம்பவங்கள் (28.67 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 19,215 சம்பவங்கள் (70.70 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 102 சம்பவங்கள் (0.37 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 43 சம்பவங்கள் (0.16 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 27 சம்பவங்கள் (0.10 விழுக்காடு

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறாதவர்கள் மற்றும் இதுவரை அந்நோய்த் தொற்று பீடிக்காதவர்கள் நோய்த் தாக்கத்திற்கான சாத்தியம் அதிக கொண்ட தரப்பினராக கருதப்படுகின்றனர் என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 43 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 32,433 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.