ECONOMY

மஹா 2022க்கு சிலாங்கூர் பெவிலியன் அரங்கம் மேம்படுத்தப்படுகிறது

12 பிப்ரவரி 2022, 10:58 AM
மஹா 2022க்கு சிலாங்கூர் பெவிலியன் அரங்கம் மேம்படுத்தப்படுகிறது

ஷா ஆலம், பிப் 12: நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ள மலேசியா விவசாயம், தோட்டக்கலை மற்றும் விவசாய சுற்றுலா கண்காட்சி (மஹா) 2022 க்கு தயாராகும் வகையில் செர்டாங்கில் உள்ள சிலாங்கூர் பெவிலியன் மேம்படுத்தப்படும்.

கோவிட்-19 தொற்று காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு, நோய் கண்ட பகுதியில் நிலைமை விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்று விவசாய நவீனமயமாக்கல் எக்ஸ்கோ இஸாம் ஹஷிம் எதிர்பார்த்ததாக கூறினார்.

அந்த நோக்கத்திற்காக எங்களிடம் ஏற்கனவே ஒதுக்கீடு உள்ளது, ஆனால் தொற்றுநோயைத் தொடர்ந்து அதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இந்த ஆண்டு மஹா ஏற்பாடு செய்யப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே ஆரம்ப தயாரிப்புகள் செய்யப்பட வேண்டும்,என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

கருப்பொருள் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டு, அப்பகுதியை மிகவும் ஒழுங்காகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்க செயல்திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்த காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, மஹா 2020 கோவிட்-19 தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக மக்களின் பாதுகாப்பு, பொது சுகாதாரம் கருதி  ஒத்திவைக்கப்பட்டது.*

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.