ECONOMY

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு நிறுவன ஊழியர்களுக்கு பணம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் உதவி

9 பிப்ரவரி 2022, 3:19 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு நிறுவன ஊழியர்களுக்கு பணம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் உதவி

ஷா ஆலம், பிப்.9: கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு நிலைக்குழுவின் கீழ் உள்ள 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பண உதவி மற்றும் மின்சாதனப் பொருட்களை பெற்றனர்.

பொதுப்பணித் துறை, சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆகிய சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு மொத்தப் பங்களிப்பு RM 870,000 ஆகும்.

வெள்ளத்தால் பொருள் சேதம் மற்றும் இழப்புகளை சந்தித்த பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கவே இந்த உதவி என்று எஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைப் பொறுத்து  RM500 முதல் RM2,000 வரை உதவி பெறுகிறார்கள். இது அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன், என்று அவர் நேற்று மாநில நிர்வாக தலைமையக கட்டிடத்தில் சந்தித்தபோது கூறினார்.

சிலாங்கூர் கானு கிளப்பின் தலைவர் என்ற முறையில் சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் பல ஊழியர்களுக்கும் இதே உதவி வழங்கப்பட்டது.

பெர்ஜயா லேண்ட் பெர்ஹாட், செலியா செங்கரா எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் டிலைட் 2000 ஹோல்டிங்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களால் பங்களிப்புகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் 19 வரை வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்தது, முந்தைய அளவு 180 மிமீ விட இரண்டு மடங்கு அதிகமாக பெய்தது, இதன் விளைவாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.