ECONOMY

கோவிட்-19  எண்ணிக்கை இன்று 13,944 ஆக  உயர்வு கண்டது

8 பிப்ரவரி 2022, 12:18 PM
கோவிட்-19  எண்ணிக்கை இன்று 13,944 ஆக  உயர்வு கண்டது

ஷா ஆலம், பிப்  8- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 13,944 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 11,034 ஆகப் பதிவாகியிருந்தது.

இந்த புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 39 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று பதிவான சம்பவங்களில்  73 அல்லது 0.52 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் 13,871 சம்பவங்கள் அல்லது 99.48 விழுக்காடு ஓன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

1 ஆம் கட்டம் : 3,942 சம்பவங்கள் (28.27 விழுக்காடு)

2 ஆம் கட்டம் : 9,929 சம்பவங்கள் (71.21 விழுக்காடு)

3 ஆம் கட்டம் : 54 சம்பவங்கள் (0.39 விழுக்காடு)

4 ஆம் கட்டம் : 11 சம்பவங்கள் (0.08 விழுக்காடு)

5 ஆம் கட்டம் : 8 சம்பவங்கள் (0.05 விழுக்காடு)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.