ECONOMY

52.3 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

5 பிப்ரவரி 2022, 11:34 AM
52.3 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், பிப் 5-  நாட்டில் நேற்று வரை மொத்தம் 1 கோடியே 22 லட்சத்து 48 ஆயிரத்து 506 பேர் அல்லது  52.3 விழுக்காட்டினர்  பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, 2 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 468 பேர் அல்லது 97.9 விழுக்காட்டுப் பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. மேலும், 99.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 7 ஆயிரத்து 237 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில்  27 லட்சத்து 90 ஆயிரத்து 792 பேர்  அல்லது 88.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை  பெற்றுள்ள வேளையில்  28 லட்சத்து 68 ஆயிரத்து 578 பேர்  அல்லது 91.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று மொத்தம் 90,661 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 2,661பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும்  1,716 பேருக்கு  இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் 86,029 பேருக்கு ஊக்கத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது .

இதன் வழி, பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்  கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 6 கோடியே 38 லட்சத்து 38 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 11 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.