ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5,720 ஆகப் பதிவு

4 பிப்ரவரி 2022, 7:14 AM
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5,720 ஆகப் பதிவு

கோலாலம்பூர், பிப் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5,720 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 5,736 ஆக இருந்தது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19  நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 87 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று நோய்க்கு இலக்கானவர்களில் 43 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சியோர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

புதிய சம்பவங்களில் 130 வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவிய வேளையில் எஞ்சிய 5,590 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை என்றார் அவர். மேலும், கோவிட்-19 நோயாளிகளில் 114 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 56 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 3,968 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 94 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று புதிதாக பதிவான 15 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 332 ஆக பதிவாகியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.