ECONOMY

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று தொடங்கி முன்பதிவின்றி ஊக்கத் தடுப்புசி பெறலாம்

27 ஜனவரி 2022, 5:43 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று தொடங்கி முன்பதிவின்றி ஊக்கத் தடுப்புசி பெறலாம்

ஷா ஆலம், ஜன 27- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிப்பவர்கள் இன்று தொடங்கி முன்பதிவின்றி பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கான வாய்ப்பினை சுகாதார அமைச்சு வழங்குகிறது.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் ஆஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியை கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள நான்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கோலாலம்பூர், புத்ரா வாணிக மையம், புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா, ஷா ஆலம் ஐ.டி.சி.சி. மையம் மற்றும் கிள்ளானிலுள்ள சோக்கா கக்கால் மண்டபம் ஆகிய இடங்களில் அந்த தடுப்பூசி மையங்கள் உள்ளன.

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக பிக்-பூஸ்டர் எனப்படும் தேசிய ஊக்கத் தடுப்பூசி இயக்கம் கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இம்மாதம் 15 ஆம் தேதி நான்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.