ECONOMY

ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஊக்கத் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

25 ஜனவரி 2022, 6:38 AM
ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஊக்கத் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஜன 25- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை பெரியவர்களில் 46.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 9 லட்சத்து 6 ஆயிரத்து 259 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 17 ஆயிரத்து 313 பேர் அல்லது 97.9 விழுக்காட்டு பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 2 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரத்து 017 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 82 ஆயிரத்து 131 பேர் அல்லது 88.4 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 64 ஆயிரத்து 738 பேர் அல்லது 91.0 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 202,292 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 1,820 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 2,711 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 197,765 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர். 

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 24 லட்சத்து 61 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 10 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.