ECONOMY

நாட்டில்  கோவிட்-19 நோய்ப் பரவல் ஏறுமுகமாக உள்ளது

25 ஜனவரி 2022, 5:29 AM
நாட்டில்  கோவிட்-19 நோய்ப் பரவல் ஏறுமுகமாக உள்ளது

கோலாலம்பூர், ஜன 25 - மலேசியாவில் கடந்த ஜனவரி 16 முதல் 22 வரையிலான 3வது நோய்த் தொற்று வாரத்தில் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஜனவரி 9 முதல் 15  ஆம் தேதி வரையிலான இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் 22,006 ஆக இருந்த  இருந்த நோய் கண்டவர்களின் எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் 7.9 சதவீதம் அதிகரித்து  23,752 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இருப்பினும், கோவிட்-19 தொடர்புடைய மரண எண்ணிக்கை 19 சதவிகிதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் 126 ஆக இருந்த மரண எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில்  102 ஆக குறைந்துள்ளது என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பியிவில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் 30.3 விழுக்காடு குறைந்து 129  ஆக ஆனது. இரண்டாவது  தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 182 ஆக பதிவானதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

சுவாச உதவி தேவைப்படும் நோயாளிகளைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 68 இல் இருந்து  52 ஆக அதாவது 23.5 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.