ALAM SEKITAR & CUACA

பணியின் போது உயர்நெறியைக் கடைபிடிப்பீர்- அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் அறிவுறுத்து

24 ஜனவரி 2022, 7:30 AM
பணியின் போது உயர்நெறியைக் கடைபிடிப்பீர்- அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் அறிவுறுத்து

ஷா ஆலம், ஜன 24- பணியை ஆற்றும் போது உயர்நெறியை கடைபிடிக்கும் அதே வேளையில் தொழில் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தும்படி அரசு ஊழியர்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

கீழ் நிலை ஊழியர்கள் தொடங்கி உயர் நிலை அதிகாரிகள் வரை அனைவரும் இலகு தன்மையுடன் கூடிய வேலை கலாசாரத்தை கடைபிடிக்கும் வேண்டும் என்பதோடு சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சில வேளைகளில் நாம் அழுத்தமும் நெருக்குலும் உள்ள சூழலை எதிர்நோக்க வேண்டி வரலாம். அத்தகைய நேரங்களில் அதே வேகத்திலும் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்துடனும் பணியை நிறைவேற்ற தயராக இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

வாடிக்கையாளர்களை எதிர்கொள்வதில் உயர்நெறி மற்றும் நிபுணத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் புத்தாண்டு செய்தியை வழங்கிய போது மந்திரி புசார் இவ்வாறு சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.