ECONOMY

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை ஒரு கோடி பேராக உயர்வு

20 ஜனவரி 2022, 7:03 AM
ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை ஒரு கோடி பேராக உயர்வு

கோலாலம்பூர், ஜன 20- நாட்டில் நேற்று 258,337 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். இதன் வழி அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 42.7 விழுக்காடாக அல்லது 1 கோடியே 2 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 629 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் 2 கோடியே 31 லட்சத்து 89 ஆயிரத்து 939 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயதுடைய இளையோரில் 27 லட்சத்து 76 ஆயிரத்து 837 பேர் அல்லது 88.2 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 28 லட்சத்து 62 ஆயிரத்து 423 பேர் அல்லது 90.9 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 246,635 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 1,981 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 4,317 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 தொடர்புடைய 13 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக கிட்ஹாப் கேகேஎம். அகப்பக்கம்  கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.