ECONOMY

மேரு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 900 பேருக்கு நிதியுதவி

19 ஜனவரி 2022, 8:24 AM
மேரு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 900 பேருக்கு நிதியுதவி

கிள்ளான், ஜன 19- கடந்த மாதம் மத்தியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மேரு தொகுதியைச் சேர்ந்த 900 பேருக்கு மாநில அரசின் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 உதவி நிதி வழங்கப்பட்டது.

இம்மாத தொடக்கத்தில் முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்ட வேளையில் தற்போது இரண்டாம் கட்ட நிதியளிப்பு விரைவில் நடத்தப்படவுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் மாவட்ட அலுவலங்கள் வாயிலாக நிதியுதவியைப் பெற்று விட்டனர். இந்த நிதியைப் பெறுவதற்கு அவர்கள் தொகுதி சேவை மையத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதியுதவியை வழங்கும் நிகழ்வு அடுத்த வாரம் நடைபெறும் எனக் கூறிய அவர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக இந்த நிதியுதவி விரைந்து வழங்கப்பட வேண்டும் என என்றார்.

இந்த நிதியதவித் திட்டத்திற்கு இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நாங்கள் தொடர்ந்து விண்ணப்பங்களைப் பெற்று வருகிறோம். நிதி வழங்கும் பணி எளிதாக மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக அந்த விண்ணப்பங்கள் யாவும் முறையாக பரிசீலிக்கப்படுகின்றன என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.