ECONOMY

88.1 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

16 ஜனவரி 2022, 7:49 AM
88.1 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 16- நாட்டில்  நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 88.1 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 73 ஆயிரத்து 263 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 90.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 61 ஆயிரத்து 246 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர  பெரியவர்களில் 97.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 459 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 99 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 938 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 167,955 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 985 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 897 பேர் இரண்டாவது  டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 166,073 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 7 லட்சத்து 29 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.

இது வரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 92 லட்சத்து 12 ஆயிரத்து 282 ஆகும்.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 19 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.