ஷா ஆலம், ஜன 10- பெர்மாத்தாங் தொகுதியிலுள்ள 346 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.கடந்த 2015 ஆம் ஆண்டு பிறந்து இவ்வாண்டில் முதலாம் வகுப்பில் நுழையும் இம்மாணவர்களுக்கு புத்தகப் பை, உணவுக் கலம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
இப்பொருள்களை இன்று தொடங்கி அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
மாநில அரசின் இந்த உதவித் திட்டம் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒரு புத்தகப் பையின் விலை 50 வெள்ளியை எட்டும் என்பது நாம் அறிந்ததே. இச்சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் சுமையைக் குறைப்பதில் இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.
இந்த உதவித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களை தாவாஸ் உறுப்பினர்கள் https://tawas.yawas.my/admin/semakan_pbms.php என்ற அகப்பக்கம் வாயிலாகவும் ஹபிஷ் (03-32812069) அல்லது ஃபாத்தின் (010-5573736) ஆகியோருடனும் தொடர்பு கொள்ளலாம்.
மாநிலம் முழுவதும் உள்ள
44,484 தாவாஸ் உறுப்பினர்கள் இவ்வாண்டிற்கான பள்ளி உபகரணங்களைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 4 ஆம் தேதி கூறியிருந்தார்.
ANTARABANGSA
பெர்மாத்தாங் தொகுதியில் 346 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்கள் விநியோகம்
10 ஜனவரி 2022, 8:39 AM
தொடர்புடைய செய்திகள்
national
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்
n.pakiya
18 ஆகஸ்ட் 2023

economy
சித்தம், ஹிஜ்ரா கூட்டாக இந்திய தொழில் முனைவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தியது
n.pakiya
7 செப்டெம்பர் 2023

national
மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மெருகூட்ட ஒற்றுமையே அச்சாணி என முழக்கமிட்டார்- பிரதமர்
n.pakiya
30 ஆகஸ்ட் 2023

national
வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா- இந்தோனேசியா இணக்கம்
n.pakiya
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




