ECONOMY

புக்கிட் மெலாவத்தியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 உணவுப் கூடைகள் விநியோகம்

9 ஜனவரி 2022, 7:54 AM
புக்கிட் மெலாவத்தியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 உணவுப் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 9- புக்கிட் மெலாவத்தி தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் 500 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

அரிசி, மாவு, சார்டின், பால் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய இந்த உணவுக் கூடைகளை விநியோகிக்கும் திட்டத்திற்கு 35,000 வெள்ளி செலவிடப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரிய ஜூல்கிப்ளி கூறினார்.

இந்த உணவுக் கூடைகளை விநியோகிக்கும் பணி நேற்றுடன் முற்றுப் பெற்றதாக கூறிய அவர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைப்பதில் இந்த உதவி ஓரளவு துணை புரியும் என்றார்.

இந்த உணவுக் கூடைகள் தவிர்த்து தனிநபர்கள், அரசு சாரா அமைப்புகள் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் புக்கிட் மெலாவத்தி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.