ECONOMY

97.7 விழுக்காட்டினருக்கு கோவிட்- 19 தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

7 ஜனவரி 2022, 6:10 AM
97.7 விழுக்காட்டினருக்கு கோவிட்- 19 தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், ஜன 7- நாட்டில் நேற்றிரவு வரை 2 கோடியே 28 லட்சத்து 76 ஆயிரத்து 224 பேர் அல்லது 97.7 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்.

நாட்டில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டை எட்டுவதற்கு இன்னும் 2.3 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளதை இது காட்டுகிறது.

மேலும் 2 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரத்து 767 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயதுக்குப்பட்ட இளையோரில் 27 லட்சத்து 63 ஆயிரத்து 787 பேர் அல்லது 87.8 விழுக்காட்டிர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 90.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 54 ஆயிரத்து 126 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 252,817 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 2,898 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 4,549 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 245,370 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 73 லட்சத்து 56 ஆயிரத்து 445 ஆகும். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.