ALAM SEKITAR & CUACA

லங்காட் ஆற்றில் நீர் மட்டம் அபாய அளவை எட்டியது

3 ஜனவரி 2022, 3:36 PM
லங்காட் ஆற்றில் நீர் மட்டம் அபாய அளவை எட்டியது

ஷா ஆலம் ஜன 3 - இன்று காலை 10.30 மணி நிலவரப்படி கோல லங்காட்டின் புக்கிட் சாங்காங்கில் உள்ள சுங்கை லங்காட் ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை (சிவப்பு) தாண்டி 4.34 மீட்டராக பதிவானது.

அப்பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஆற்றின் இயல்பான அளவான  4.20 மீட்டரை விட  0.14 மீட்டர் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை publicinfobanjir.water.gov.my என்ற அகப்பக்கம் வெளியிட்ட தகவல்கள் காட்டுகின்றன.

இதனிடையே, சிப்பாங், டிங்கிலில் உள்ள சுங்கை லங்காட் ஆற்றில் நீர்மட்டம் 0.28 மீட்டர் அதிகரித்து 6.68 மீட்டர் எச்சரிக்கை அளவில் இருந்தது. மழையின் காரணமாகவும் இப்பகுதியில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வெள்ள நிலவரங்கள்  குறித்த சமீபத்திய தகவல்களை publicinfobanjir.water.gov.my என்ற இணையதளத்தளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் .

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.