ECONOMY

22.8 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

31 டிசம்பர் 2021, 8:38 AM
22.8 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 31- நாட்டிலுள்ள பெரியவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 55 ஆயிரத்து 374 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 2 கோடியே 31 லட்சத்து 48 ஆயிரத்து 776 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 87.5 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 53 ஆயிரத்து 927 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 28 லட்சத்து 46 ஆயிரத்து 238 பேர் அல்லது 90.4 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 205,259 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 3,419 பேர் இதில் டோஸ் தடுப்பூசியையும் 4,719 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 197,121 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 57 லட்சத்து 15 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 61 லட்சத்து 9 ஆயிரத்து 673 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.